தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நபர் குணமடைந்தார் – அமைச்சர் விஜயபாஸ்கர்
Mar 10, 2020, 21:58 IST1583857716000
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீனா, தென்கொரியா ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓமனில் இருந்து தமிழகத்துக்குக் காஞ்சிபுரம் பொறியாளருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டிருப்பதால், அவர் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் நபர் குணமடைந்துள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.