தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 500 பேர் மீது வழக்குப்பதிவு!

 

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 500 பேர் மீது வழக்குப்பதிவு!

அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 500 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடாது என்று வலியுறுத்தி சென்னையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சார்பில் நேற்று மாலை அமைதி பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து காமராஜர் சிலை முன்பு அவசரக்கூட்டமும் நடத்தினர். அப்போது, திடீரென காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், உரிய அனுமதியின்றி பேரணி நடத்திய காரணத்தால், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட பேரணியில் கலந்து கொண்ட 500 பேர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.