தமிழகத்தில் ஒரே நேரத்தில் 19,427 பணியிடங்கள் நிரந்தரம்! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

 

தமிழகத்தில் ஒரே நேரத்தில் 19,427 பணியிடங்கள் நிரந்தரம்! அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

பல ஆண்டுகளாகவே  பள்ளிக் கல்வித் துறையில்  தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

பல ஆண்டுகளாகவே  பள்ளிக் கல்வித் துறையில்  தற்காலிக அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், முழு நேர ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த பணியிடங்களில் பணிபுரிந்து வருபவர்களுக்கு நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

teachers

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நிறைவில் 19,427 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழகுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.  

sengottaiyan

பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 19,427 பேரில், முதற்கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துள்ளார்.