தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றியை ஈட்டுப் போராடும் பாஜக…

 

தமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது வெற்றியை ஈட்டுப் போராடும் பாஜக…

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் தமிழக பாஜகவினரிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைதேர்தல் அறிவிப்பு குறித்து பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியனரும் தங்களது வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். வேட்பு மனுக்களை அளிக்க கடைசி நாளாக செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியத் தேர்தல் ஆணையம்

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் தமிழக பாஜகவினரிடம் ஆலோசனை நடத்துவதாக தெரிவித்தார்.இதில் அவர்களுக்கு இடைதேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசனை வழங்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத நிலை உருவானது. அதனால் இந்த முறை தமிழகத்தில் நடைபெற உள்ள இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும் வெற்றியை ஈட்டும் பணியில் முனைப்புக் காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.