தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!

 

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது

TN Assembly

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை பிரதமர் ஊரடங்கு பிறப்பித்துள்ளார். இதனால் நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 911பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 9பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இன்னும் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.