தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

 

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தொடர் மழையால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகத்தில்  இன்று மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தின் பல்வேறு  இடங்களில்  மழை பெய்து வருகிறது. குறிப்பாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம், மேட்டுப்பட்டி, திருக்கட்டளை, முள்ளூர் உள்படப் பகுதிகளிலும், சிவகங்கையின் திருப்பத்தூர், பிள்ளையார் பட்டி உள்ளிட்ட சில இடங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.  தொடர் மழையால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

rain

இந்நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாகக்  காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், நீலகிரி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.