தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!

 

தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் வாட்டி வதைத்துவருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”வெப்பநிலை பொதுவாக மே மாதத்தில் சற்றே அதிகரித்துக் காணப்படும். அந்நிலை இந்த ஆண்டும் தொடரும். அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அங்கேயே நீடிக்கிறது. புயலாக மாற வாய்ப்பு குறைவு. எனவே கடலிலேயே அது வலுவிழக்கும். தமிழகத்தில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பு உண்டு. மே 12 ஆம் தேதி வாக்கில் வங்கக் கடலில் ஒரு தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால் தமிழகத்தில் மழை உள்ளதா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கத்தரி வெயில் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி 105.08 டிகிரி செல்சியஸ், மதுரையில் 10.78, சேலத்தில் 104.54, தருமபுரியில் 102.56 டிகிரியும் பதிவாகியுள்ளது. மேலும் திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 102.2, மதுரை விமான நிலையத்தில் 101.12, வேலூரில் 100.94, கோவையில் 100.76 டிகிரியையும் தொட்டுள்ளது.