தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று
May 16, 2020, 18:50 IST1589635238000
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 585-ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனா நோய்க்கு இதுவரை தமிழகத்தில் 74 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக எப்போதும்போல சென்னையில் 332 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது.
மேலும் கொரோனா பரிசோதனைக்காக காஞ்சிபுரத்தில் மக்களிடம் சளி மாதிரிகளை சேகரித்து ஈடுபட்ட 7 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.