தமிழகத்தில் இன்னும் 4 இடங்களில் விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை!

 

தமிழகத்தில் இன்னும் 4 இடங்களில் விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தின் ‘ஐயா’ கேரட்கருக்கு தமிழகத்தில் இன்னும் 4 மாவட்டங்களில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது.

சென்னை: ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ’சீதக்காதி’ படத்தின் ‘ஐயா’ கேரட்கருக்கு தமிழகத்தில் இன்னும் 4 மாவட்டங்களில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது.

‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ திரைப்படத்தில் நாடக கலைஞராக வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா உள்ளிட்ட 5 முக்கிய கதாநாயகிகள் நடித்துள்ள நிலையில், யாரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிக்கும் 25வது திரைப்படமான ‘சீதக்காதி’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.20ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மாலில் நடிகர் விஜய் சேதுபதியின் ‘அய்யா’ கேரக்டரின் மெழுகு சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.

seethakadhi

விஜய் சேதுபதி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த மெழுகு சிலை அருகே பலரு செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்பட்ட மெழுகு சிலையை தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் 4 மாவட்டங்களில் விஜய் சேதுபதிக்கு மெழுகு சிலை வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதியின் 25வது படம், ‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்’ வெற்றிக் கூட்டணி, விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றம், முதிர்ச்சியான நடிப்பு என ‘சீதக்காதி’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.