தமிழகத்தில் இன்னும் அறியப்படாத முன்னுதாரணம் பழ நெடுமாறன்! – இ.கம்யூ மகேந்திரன்

 

தமிழகத்தில் இன்னும் அறியப்படாத முன்னுதாரணம் பழ நெடுமாறன்! – இ.கம்யூ மகேந்திரன்

தமிழகத்தின் இன்னும் அறியப்படாத முன்னுதாரணங்களில் அய்யா முன்வரிசையில் இருப்பவர். தமிழகம் அவரை அறிந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்திற்கு முன்னுதாரணமானவர் என்பதை இன்னமும் முழு தமிழ் சமூகமும் உணர்ந்து கொள்ளவில்லை.
திராவிட இயக்கம் மாணவர்களிடம் விதையாய் விழுந்து முளைவிடத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்.

தமிழக அரசியலில் இன்னும் அறியப்படாத முன்னுதாரணங்களில் ஒருவராக பழ நெடுமாறன் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஐயா பழ நெடுமாறன் அவர்கள் குறித்து அவர் பிறந்த நாள் அன்று என் மன உணர்வுகளை பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இன்று பதிவு செய்கிறேன்.

mahendran-cpim

தமிழகத்தின் இன்னும் அறியப்படாத முன்னுதாரணங்களில் அய்யா முன்வரிசையில் இருப்பவர். தமிழகம் அவரை அறிந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்திற்கு முன்னுதாரணமானவர் என்பதை இன்னமும் முழு தமிழ் சமூகமும் உணர்ந்து கொள்ளவில்லை.
திராவிட இயக்கம் மாணவர்களிடம் விதையாய் விழுந்து முளைவிடத் தொடங்கிய ஆரம்ப காலங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர். அங்கிருந்து தமிழரின் உரிமைகளை கற்றறிந்தவர். எளிமையும் நேர்மையையும் அரசியல் ஆழத்தையும் காமராஜர் அருகிலிருந்து கற்றவர். நாடாளுமன்ற அரசியலில் எந்த மயக்கத்திற்கு அடிபணியாதவர். தமிழர்களின் உரிமையை புதிய பார்வையில் உருவாக்க மக்களை அடிப்படையாக கொண்டு சிந்திப்பவர். ஈழமக்களின் அரசியலுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவருடைய பார்வை எதிர்கால தமிழகத்திற்கு மிகவும் வழிகாட்டக் கூடியது. ஐயா அவர்களின் பிறந்தநாளை என் உணர்வுகள் அனைத்தும் ஒன்றுகூடி என் மனதுக்குள் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.”