தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், இரவு நேரத்தில் பனிப் பொழிவு ஏற்படுகிறது. 

கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் ஒரு காட்டம் காட்டி வருகிறது. இந்த வெப்பத்தையே மக்கள் தாங்க முடியாமல் இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இருக்கும் வெப்பத்தை எப்படித் தாங்கப் போகிறோமோ என்று மக்கள் பெரும் கவலையுடன் இருந்து வருகின்றனர். பகல் நேரத்தில் வெயில் அடித்தாலும், இரவு நேரத்தில் பனிப் பொழிவு நிகழ்கிறது.

ttn

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாகக் கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிக பட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் என்றும் குறைந்த பட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.