தமிழகத்தில் அறிமுகமான பால் ஏ.டி.எம்!

 

தமிழகத்தில் அறிமுகமான பால் ஏ.டி.எம்!

தருமபுரியில் பட்டதாரி இளைஞர் ஒருவர், 24 மணிநேரமும் பால் வழங்கக்கூடிய பால் ஏ.டி.எம்மை அறிமுகம் செய்துள்ளார். 

தருமபுரியில் பட்டதாரி இளைஞர் ஒருவர், 24 மணிநேரமும் பால் வழங்கக்கூடிய பால் ஏ.டி.எம்மை அறிமுகம் செய்துள்ளார். 

பால்

அரூரை அடுத்துள்ள கொளகம்பட்டியைச் சேர்ந்த முருகன், தரமான விலை மலிவான பாலை பால் ஏ.டி.எம் மூலம் வழங்கிவருகிறார். இந்த பால் ஏடிஎம் 300 லிட்டர் கொள்ளளவும் கொண்டது என்றும் இதில் இரண்டு நாட்களுக்கு பால் கெடாமல் பதப்படுத்தி வைக்கக்கூடிய வசதிகள் இருப்பதாவும் கூறும் முருகன், ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி எவ்வாறு பணத்தை எடுக்கிறோமோ அதேபோல் இந்த ஏ.டி.எம்மில் பணத்தைக் கொடுத்து பால் வாங்கிக்கொள்ளலாம் என்கிறார். 

பால்

அதாவது 10 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என் பணத்தை நாணயமாகவோ, ரூபாய் நோட்டுகளாகவோ செலுத்தினால் அதற்கேற்ற பாலை இந்த ஏ.டி.எம் வழங்கும்.