தமிழகத்திலும் நுழைந்த கரோனா… ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

 

தமிழகத்திலும் நுழைந்த கரோனா… ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி!

உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தீயாய் பரவி வரும் கரோனா வைரஸ் இப்போது தமிழகத்திலும் பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மூன்று பேருக்கு COVID-19 தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது – லடாக்கில் இரண்டு மற்றும் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது.

 

உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தீயாய் பரவி வரும் கரோனா வைரஸ் இப்போது தமிழகத்திலும் பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மூன்று பேருக்கு COVID-19 தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது – லடாக்கில் இரண்டு மற்றும் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 34 ஆக  உயர்ந்துள்ளது.

corona-tn

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவிவருகிறது. தமிழகத்தில் கரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் பல்வேறு மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தீவிர வைரஸை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

corona-tn

தற்போது, ஓமன் நாட்டில் இருந்து இந்தியா வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்கு  கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவருடன் விமானத்தில் பயணித்த  மற்ற 27 பேருக்கும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.