தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!

 

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்: அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை!

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாகத்  தமிழகத்தில் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  வரும் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

ttn

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த இரு தினங்களுக்குக்  கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

rain

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 2 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மழை கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றால் ஏற்படுகிறது.

ttn

இதனால்  நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் காஞ்சிபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.