தமிழகத்தின் 37-வது மாவட்டமாக இன்று உதயமாகிறது செங்கல்பட்டு!

 

தமிழகத்தின் 37-வது மாவட்டமாக  இன்று உதயமாகிறது செங்கல்பட்டு!

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடங்கி வைக்கிறார். 

நீண்ட நாட்களாகப் பொதுமக்கள் வைத்து வந்த கோரிக்கையை ஏற்றுக்  கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விதி எண் 110ன் கீழ்  தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகராட்சிகள் மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று அறிவித்தார். 

 

ttn

இந்நிலையில் தமிழகத்தின் 37-வது மாவட்டமாகச் செங்கல்பட்டு இன்று உதயமாகிறது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வேன்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி மையம் பின்புறம் உள்ள மைதானத்தில் இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடங்கி வைக்கிறார். 

ttn

இதைத் தொடர்ந்து  80 கோடி ரூபாய் மதிப்பில்  5 ஆயிரம் பேருக்கு  நலத்திட்ட உதவிகளையும் வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.