தமிழகத்தின் எந்த அணைகளின் மீதும் கேரளாவுக்கு அதிகாரம் கிடையாது! மத்திய மந்திரி உறுதி!

 

தமிழகத்தின் எந்த அணைகளின் மீதும் கேரளாவுக்கு அதிகாரம் கிடையாது! மத்திய மந்திரி உறுதி!

முல்லைப்பெரியாறு போன்ற அணைகள் விவகாரத்தில் தொடர்ந்து நதிநீர் பங்கீட்டு சிக்கல்களை அனுபவித்து வரும் தமிழக அரசும், தமிழக கட்சிகளும் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. நாட்டில் நிகழும் பேரழிவுகளை தடுக்கும் வகையில் நாட்டின் முக்கியமான அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு, இயக்கம் போன்றவற்றுக்காக நிறுவன வழிமுறையை உருவாக்க வகை செய்யும் அணை பாதுகாப்பு மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.

முல்லைப்பெரியாறு போன்ற அணைகள் விவகாரத்தில் தொடர்ந்து நதிநீர் பங்கீட்டு சிக்கல்களை அனுபவித்து வரும் தமிழக அரசும், தமிழக கட்சிகளும் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. நாட்டில் நிகழும் பேரழிவுகளை தடுக்கும் வகையில் நாட்டின் முக்கியமான அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு, இயக்கம் போன்றவற்றுக்காக நிறுவன வழிமுறையை உருவாக்க வகை செய்யும் அணை பாதுகாப்பு மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.

mullaiperiyar

கடந்த ஆகஸ்டு மாதம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது.  மாநில அரசின் அணைகள் தொடர்பான உரிமைகளை பறிப்பதாக கூறி நாட்டின் பல்வேறு மாநிலங்களும் இந்த மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், நேற்று அதிமுக எம்பிக்கள், மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மந்திரி கஜேந்திர சிங் செகாவத், முல்லைப்பெரியாறு அணையின் முழு கட்டுப்பாட்டு அதிகாரமும் தமிழகத்திடமே தொடர்ந்து இருக்கும் என்றார். 

gajendra

மேலும், முல்லை பெரியாறு அணையின் உரிமை, அதன் வழக்கமான இயக்கம், பராமரிப்பு மற்றும் தமிழகத்தின் நீர் உரிமை போன்றவற்றில் ஏற்கெனவே இருந்த நிலை தான் இப்போதும் தொடரும் என்றும், இவற்றில் எந்த மாற்றத்தையும் அணை பாதுகாப்பு மசோதா ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.  முல்லைப்பெரியாறு அணை அல்லது தமிழகத்தின் பிற அணைகள் மீது கேரள மாநில அணை பாதுகாப்பு அமைப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் திட்டவட்டமாக கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார்.