‘தப்பு என்றால் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்’: விஜய் சேதுபதி ஓபன் டாக் 

 

‘தப்பு என்றால் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டேன்’: விஜய் சேதுபதி ஓபன் டாக் 

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு வருடத்திற்குப் பல படங்கள் வெளியாகிறது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு வருடத்திற்குப் பல படங்கள் வெளியாகிறது. இவர் தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதையில் நடித்து வருகிறார். ஆனால் அவர் நடிப்பதற்கு ஈழத்தமிழர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், ‘நான் சின்ன வயதிலிருந்தே நான் கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனைச் சந்தித்தபோது நான் இதை அவரிடம் சொன்னேன். என் நண்பர்கள் என்னை பந்து பொறுக்கத்தான் விளையாட்டில் சேர்த்துக் கொண்டனர். கிரிக்கெட்டின் அடிப்படை கூட எனக்குத் தெரியாது. இந்தப் படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றியது கிடையாது அவரது வாழ்க்கையும் பற்றியும் இதில் காட்டப்படவுள்ளது. என் மீது அன்பு வைப்பவர்கள் யாரையும் நான் இழக்கமாட்டேன். அதுபோன்ற ஒரு காட்சிக் கூட இந்தப் படத்தில் இருக்கவே இருக்காது.

நான் அன்பானவன். அப்படி இருக்கும் சமயத்தில் என் மீது அன்பு செலுத்துகிறவர்களை எப்படி நான் காயம் செய்வேன்? நான் அவ்வளவு சுயநலமான ஆள் இல்லை. இதையும் மீறி காயப்படுத்துவது போல் நடந்துகொண்டால், சின்ன குழந்தையாக இருந்தால் கூட மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.