தன் செல்ல மகளின் பெயரை அறிவித்தார் ரோகித் சர்மா!

 

தன் செல்ல மகளின் பெயரை அறிவித்தார் ரோகித் சர்மா!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, தனது செல்ல மகளுக்கு வைத்துள்ள பெயரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்பை: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, தனது செல்ல மகளுக்கு வைத்துள்ள பெயரை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ‘ஹிட்மேன்’ என அழைக்கப்படும் அதிரடி வீரர் ரோகித் சர்மா – ரித்திகா தம்பதிக்கு, கடந்த டிசம்பர் 31-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா, தான் தந்தையானதையடுத்து உடனடியாக மும்பைக்கு விரைந்தார். குழந்தை பிறந்து சில நாட்களில், தனது செல்ல மகளின் முதல் புகைப்படத்தை ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தன் மனைவியுடன் மகளை தூக்கி வைத்திருக்கும் புகைப்படைத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் சர்மா வெளியிட்டுள்ளார். அதில், “உனக்காக கடைசி விமானத்தில் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து வந்தேன்… நேற்று நாள் முழுவதும் உனது அருகிலேயே அமர்ந்து கொண்டு நீ கண்விழிக்கும் அந்த அற்புத நிமிடங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்… இந்த அருமையான தருணம் என் வாழ்நாளில் மறக்கவே மறக்காது என் அன்பு மகள் சமைரா!” என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், தனது செல்ல மகளின் பெயர் ‘சமைரா’ என்பதையும் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.