தன் கட்சியை கல்லறையில் புதைத்தவர்….. காங். எம்.பி.யை விளாசிய காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்…

 

தன் கட்சியை கல்லறையில் புதைத்தவர்….. காங். எம்.பி.யை விளாசிய காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்…

தனது அரசியலமைப்பு நிலைப்பாட்டை தவறாக பேசிய காங்கிரஸ் எம்.பி. ரஞ்சன் சவுத்ரியை, உங்க கட்சியை கல்லறையில் புதைத்து விட்டீர்கள் என கடும் டோஸ் விட்டுள்ளார் காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக்.

நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஆகிர் ரஞ்சன் சவுத்ரி சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் இல்லை என எதிர்மறையாக பேசி இருந்தார். இதனை காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் அண்மையில் கண்டித்து இருந்தார். 

ரஞ்சன் சவுத்ரி

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், சத்ய பால் மாலிக் கவர்னர்போல் செயல்படவில்லை. ஜம்மு அண்டு காஷ்மீரின் பா.ஜ. தலைவர் போல் செயல்படுகிறார் என அவரது அரசியலமைப்பு நிலைப்பாட்டை இழிவுப்படுத்தும் வகையில் பேசி இருந்தார். அதற்கு கவர்னர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ்

காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் இது குறித்து கூறுகையில், நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சு (காஷ்மீர் விவகாரம்) மூலம், தனது கட்சியை (காங்கிரஸ்) கல்லறையில் புதைத்து விட்டார். அவருடைய அறிவுக்கு நான் என்ன சொல்ல வேண்டும்? நான் எனது பணியை அதிக பக்தியுடன் செய்கிறேன். இது போன்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து கவலைப்படவில்லை என தெரிவித்தார்.