தன்ஷிகாவுக்காக ரத்து செய்யப்பட்ட ‘யோகி டா’ ஷூட்டிங்!

 

தன்ஷிகாவுக்காக ரத்து செய்யப்பட்ட ‘யோகி டா’ ஷூட்டிங்!

‘கபாலி’ நடிகை சாய் தன்ஷிகா நடித்து வரும் ‘யோகி டா’ படத்தின் ஷூட்டிங்கில் பாட்டில் பீஸ் குத்தியதால் காயமடைந்தார்.

கோயம்புத்தூர்: ‘கபாலி’ நடிகை சாய் தன்ஷிகா நடித்து வரும் ‘யோகி டா’ படத்தின் ஷூட்டிங்கில் பாட்டில் பீஸ் குத்தியதால் காயமடைந்தார்.

இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இயக்கி வரும் ‘யோகி டா’ திரைப்படம் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகை தன்ஷிகா டூப் போடாமல் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் கோயம்புத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், நைட் கிளப் ஒன்றில் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக தன்ஷிகாவின் இடது கண்ணிற்கு கீழ் பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டது.

saidhanshika

இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை படக்குழுவினர் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதனால் ‘யோகி டா’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. தற்போது தன்ஷிகா நலமாக இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.