தன்வந்திரி வழிபாடு சகல நோய்களையும் தீர்க்கும் வழிபாடு 

 

தன்வந்திரி வழிபாடு சகல நோய்களையும் தீர்க்கும் வழிபாடு 

நோய்களில் இருந்து காத்து ரட்சித்து ஆரோக்கிய வாழ்வு தரும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் பற்றி இந்த பதிவில் பார்போம்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தை எடுத்தபோது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் அந்த கடலில் இருந்து எழுந்தவரே தன்வந்தரி. அவர் தன் கையில் அமிருத கலசத்தை எடுத்து வந்தார். வெளியில் வந்தவர் மகாவிஷ்ணுவை வணங்கி நின்றார்.அவருக்கு அப்சா என விஷ்ணு பெயர் சூடினார். 

thyanvanthari

தன்வந்தரி விஷ்ணுவிடம் அமிருதத்தில் தேவர்களுக்கு இணையாக தன்னுடைய பாகத்தைத் தருமாறு கேட்டதற்கு விஷ்ணு கூறினார், நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்ததினால் உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. ஆகவே நீ இரண்டாம் பிறப்பை என்னுடைய அவதாரமாக பூமியில் எடுக்கும்போதே உனக்கும் தேவர்களில் ஒருவர் என்ற அந்தஸ்த்து கிடைக்கும். 

நீ அப்போது ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி எழுதுவாய் . அதன் பின் உன்னை உலகம் ஆயுர்வேத அதிபதியாக ஏற்றுக் கொள்ளும்  எனக் கூறியப் பின் மறைந்து போனார்.  வெகு காலத்துக்குப் பின் தன்வந்தரி காசியை ஆண்டுவந்த ஒரு மன்னனின் வம்சத்தில் அவர்களின் மகனாகப் பிறந்தார். அவர் ஆயுர்வேத மருத்துவக் கலையில் திறமைசாலியாகத் திகழ்ந்தார்.

perumal

ஒருமுறை தன்வந்தரியும் அவருடைய சீடர்களும் கைலாசத்துக்குச் சென்று கொண்டு இருந்தனர். வழியில் அவர்களை தக்சன் என்ற நாகம் வழி மறைத்து தடுக்க முயன்று அவர்கள் மீது விஷத்தைப் பொழிந்தது. 

ஆகவே கோபமடைந்த அவர் சீடர்கள் அதன் தலையில் இருந்த மணிகளை பிடுங்கி தூர எறிந்தனர். அதைக் கேட்ட வாசுகி உடனேயே தன்னுடைய படையுடன் வந்து அவர்களுடன் யுத்தம் செய்தது.

 வாசுகி விஷக் காற்றை ஊதிக்கொண்டே வந்து தன்வந்தரியின் அனைத்து சீடர்களையும் விஷக்காற்றால் மூர்ச்சி அடையச் செய்ய அந்த இடத்திலேயே தன்வந்தரி ஆயுர்வேத மருந்து தயாரித்து அதைக் கொடுத்து மூர்ச்சி அடைந்தவர்களை எழச் செய்தார். 

அதைக் கேட்ட வாசுகியுடைய சகோதரியான மானச தேவி வந்து அந்த சீடர்களை மீண்டும் மயக்கம் அடைய வைக்க அப்போதும் தன்வந்தரி தமது மருத்துவ மகிமையினால் அவர்களை உயிர் பிழைக்க வைத்தார். 

perumal

ஆகவே பாம்புகளுக்கு புரிந்தது தன்வந்தரி கைலாயம் செல்வதை இனி தடுக்க முடியாது என்பது. மானச தேவி அவரைப் பற்றிய விவரத்தைக் கேட்டு அறிந்ததும் அவர் விஷ்ணுவினால் படைக்கப்பட்டவர், அவர் தேவர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டு அவரை கைலாயத்துக்கு தாமே அழைத்துச் சென்றனர்.  

அதன் பின் தேவலோகத்தில் அனைவரும் தன்வந்தரியை தம்முடைய ஆஸ்தான மருத்துவராக ஏற்றுக் கொள்ள தன்வந்தரியின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி அவரே ஆயுர்வேத மருத்துவத்தின் அதிபரானார்

தன்வந்தரி தனது கையில் அமிருதக் கலசத்தை வைத்துக் கொண்டு உள்ளவாறு காட்சி தருகின்றார். ஸ்ரீரங்கத்து ரங்கஸ்வாமி ஆலயத்தில் அவருக்கு தனி சன்னதி உள்ளது. உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்தரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபாட்டு வருகின்றனர் எனக் கூறுகிறார்கள்.மேலும் கேரள மாநிலம் சேர்த்தால என்ற இடத்தில் அமைந்துள்ளது தன்வந்திரி திருக்கோயில் ஆகும்.

இத்திருக்கோயிலில் தன்வந்திரியே மூலவராக அருள்பாலித்து வருகிறார். இத்திருக்கோயிலில் ஓணத்தன்றும், பிறதிருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடுநடைபெறுகிறது. சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடைபெறுகிறது. திருவோண நோன்பும், சந்தான வழிபாடும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். முக்குடி என்னும் மருந்தை 28 மூலிகைகள்,பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து செய்கின்றனர். 

thanvanthiri

இது இந்தக் கோயிலில் முன்பதிவின் பேரில் கிடைக்கும். பூஜை செய்த மருந்தை தன்வந்திரியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் வைத்துள்ளனர். இதனைப் பருகுவதால் நோய்கள் குணமடைகிறது. சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் மறையும். விக்ரகத்தின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. 

இங்கு நடக்கும் உற்சவத்தின் போது ஆஸ்துமா, வாத நோய்கள் குணமடையவும், நினைத்தவை நடக்கவும் கயற்றேல் வானம் என்ற பூஜை செய்யப்படுகிறது. அமாவாசைகளில் நடக்கும் பிதுர்காரிய நிழ்ச்சியின் போது, காட்டு சேப்பங்கிழங்கு கொண்டு தயாரிக்கும் தாள்கறி நிவேதனம் செய்யப் படுகிறது. 

கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது.ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நாளில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் இத்தலத்தில் நடைபெறுகிறது.

தன்வந்திரி மந்திரம்: 

ஓம் நமோ பகவதே வாஸூதேவாய 
தந்வந்த்ரயே அம்ருத 
கலசஹஸ்தாய 
ஸர்வ ஆமய விநாசநாய 
த்ரைலோக்ய நாதாய 
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.