‘தன்பாலின ஈர்ப்பு’ காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்: வைரலாகும் போட்டோஸ்!
நெருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓரின சேர்க்கை குற்றமில்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ஓரின பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மற்றும் நிவேத் அந்தோனி என்பவர்கள் தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் ‘ப்ரீ வெட்டிங் ஷூட்’ வைத்தனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கூறியுள்ள அவர்கள், தன்பாலின ஈர்ப்பினர் திருமணம் என்பது மற்ற இந்திய திருமணங்கள் போல மிகவும் அழகானது. இதை மக்கள் உணரவேண்டும். நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதால் ப்ரீ வெட்டிங் ஷூட் வைத்தோம். அது இந்தளவுக்கு வைரலாகும் என்பது எங்களுக்கு தெரியாது. எங்கள் திருமணத்திற்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் அவர்கள் எங்கள் திருமணத்திற்கு வரமாட்டார்கள். மற்றபடி அவர்களுக்கு எங்கள் மீது கோபம் இல்லை’ என்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதன்முறையாக கேரளாவில், நிகேஷ் உஷா புஷ்கரன் மற்றும் சோனு ஆகியோர் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.