தன்பாலின ஈர்ப்பால் ‘சகோதரிகள்’ செய்த காரியம்: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!

 

தன்பாலின ஈர்ப்பால் ‘சகோதரிகள்’ செய்த காரியம்: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!

திருமணம் செய்து வைக்காவிட்டால் இந்த இடத்தை  விட்டு நகரமாட்டோம் என்று கூறி அடம்பிடிக்க வேறுவழியின்றி அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் : சகோதரி முறைகொண்ட இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தின் ரொஹான்யா பகுதியைச் சேர்ந்த  சகோதரி முறைகொண்ட இருவர், திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இவர்களுக்கு திருமணத்திற்கு அவர்களது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கவே, அங்கிருந்த  சிவன் கோயிலுக்கு வந்த அந்தப் பெண்கள்,  புரோகிதரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். 

marriage

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால்  அந்த பெண்களோ திருமணம் செய்து வைக்காவிட்டால் இந்த இடத்தை  விட்டு நகரமாட்டோம் என்று கூறி அடம்பிடிக்க வேறுவழியின்றி அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையறிந்த அப்பகுதிவாசிகள் கோயிலின் முன்பு திரளாகக் கூடியுள்ளனர். 

இதை தொடர்ந்து திருமணம் முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிய பெண்கள்  சமூக வலைதளத்தில் தங்களுடைய திருமணப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக  வாரணாசியில் நடைபெறும் முதல் தன்பாலின திருமணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.