தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனைவியை கொலை செய்த கணவன் கோவாவில் அதிர்ச்சி சம்பவம்

 

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனைவியை கொலை செய்த கணவன் கோவாவில் அதிர்ச்சி சம்பவம்

கோவா மாநிலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கூலித் தொழிலாளி ஒருவர் தனக்கும் சோறின்றி  தன்னுடைய மனைவியையும் குணப்படுத்த முடியாமல் வேறு வழியின்றி அவரை உயிரோடு புதைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோவா என்ற பகுதியில் வசித்து வரும் துக்காராம் கூலித் தொழில் செய்து வந்தார். அன்றாடம் அதிகபட்சம் 100 ரூபாய் மட்டுமே அவரால் சம்பாதிக்க முடியும் எனக் கூறப்படுகிறது இதற்கிடையே அவரது மனைவி தான்வி நோய்வாய்ப்பட்டார்.

கோவா மாநிலத்தில் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கூலித் தொழிலாளி ஒருவர் தனக்கும் சோறின்றி  தன்னுடைய மனைவியையும் குணப்படுத்த முடியாமல் வேறு வழியின்றி அவரை உயிரோடு புதைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோவா என்ற பகுதியில் வசித்து வரும் துக்காராம் கூலித் தொழில் செய்து வந்தார். அன்றாடம் அதிகபட்சம் 100 ரூபாய் மட்டுமே அவரால் சம்பாதிக்க முடியும் எனக் கூறப்படுகிறது இதற்கிடையே அவரது மனைவி தான்வி நோய்வாய்ப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க தொடர்ந்து கையில் பணம் இல்லை. ஏற்கனவே சாப்பிடுவதற்கும் வழியில்லாமல் இருந்த துக்காராம் மனைவியையும் கவனித்துக் கொள்ள முடியவில்லை. உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி விட்ட நிலையில் மேலும் கஷ்டத்தில் இருந்தார் துக்காராம்.

goa

இதற்கிடையே மனைவியை கொலை செய்தால் மட்டுமே இந்த பிரச்சனையில் இருந்து மீள முடியும் என நினைத்து அவரை அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு குழிதோண்டி கனத்த இதயத்துடன் மனைவியை மண்ணில் புதைத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார் துக்காராமின் மனைவி காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் பொலிசாரிடம் தெரிவிக்க போலீசார் வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல் அளிக்கையில் மனைவியை கொன்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் காட்டிய அடையாளத்தின் படி கால்வாய் பகுதிக்கு சென்ற போலீசார் துக்காராமின் மனைவி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் துக்காராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சோறு இன்றி தவித்த துக்காராம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் இனி அரசாங்கமாவது மூன்று வேளை சோறு போடும் என எதிர்பார்க்கலாம்