தன்னால் இறந்த கோழிகுஞ்சை காப்பாற்ற 6 வயது சிறுவன் செய்த செயல்: குவியும் பாராட்டு!

 

தன்னால் இறந்த கோழிகுஞ்சை காப்பாற்ற 6 வயது சிறுவன் செய்த செயல்: குவியும் பாராட்டு!

கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய 6 வயது சிறுவன் அதனைக் காப்பாற்ற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மிசோரம்:  கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய 6 வயது சிறுவன் அதனைக் காப்பாற்ற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

man

வளர்ச்சியை நோக்கி மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லாமல் சென்று கொண்டிருக்கிறோம். உதாரணமாகச் சாலையில் ஒரு மனிதன் அடிபட்டுக் கிடந்தால் கூட அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூட நம்மில் பெரும்பாலானவர்களுக்கு நேரமில்லை. ஆனால் இன்னும் நம் உலகில் மனிதம் அழிந்து விடவில்லை என்பதற்கு இந்த சம்பவமே சான்று. 

man

மிசோரமை சேர்ந்த டெரிக் என்ற 6 வயது சிறுவன் ஒருவன், சைக்கிள் ஓட்டி செல்லும் போது, தெரியாமல் பக்கத்துக்கு வீடு கோழிக்குஞ்சு மீது ஏற்றியுள்ளான். இதைக் கண்டு பதறிப்போன அந்த சிறுவன், 
கோழிக்குஞ்சு இறந்துபோனது கூட தெரியாமல் அதை எடுத்து கொண்டு  பத்து ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடியுள்ளான்.

boy

அங்கிருந்த சூழலை கண்ட பின் மீண்டும் வீட்டுக்கு வந்து  100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிறுவனின் செயலை கண்ட மருத்துவமனை ஊழியர்கள், சிறுவனை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. 
 

இதையும் வாசிக்க: தன்னை காண வந்த பாட்டியை குஷிப்படுத்திய தோனி: வியக்க வைக்கும் வீடியோ!