தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்!

 

 தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்!

தென்பட்ட கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 24ஆம் தேதி உச்சத்தை அடைந்துள்ளது. இதுவரை  1257 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு 37,776 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஆங்காங்கே தென்பட்ட கொரோனா பாதிப்பு, ஏப்ரல் 24ஆம் தேதி உச்சத்தை அடைந்துள்ளது. இதுவரை  1257 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

tt

இந்நிலையில் கொரோனா தடுப்புப்பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நமக்கு கொரோனா வராது என அலட்சியத்துடன் யாரும் இருக்கக்கூடாது.  தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து 10 நாட்களுக்கு ஒருமுறை டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் “என்று கேட்டுக்கொண்டார். 

tt

தொடர்ந்து பேசிய அவர், “வீடுவீடாக சென்று கொரோனா அறிகுறி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனாவை ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை. மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவம் போல் பயன்படுத்தலாம் பேசும்போது சிலர் முகக்கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே சென்னை ராயபுரத்தில் அதிகபட்சமாக கொரோனா நோய் தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக அண்ணாநகரில் 4 பேரும், திரு.வி.க நகரில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் ராயபுரத்தை பின்னுக்கு தள்ளி திருவிக நகர் கொரோனா பாதிப்பு பகுதியில் உச்சத்தை தொட்டுள்ளது.