தனுஸ்ரீ தத்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ராஜ் தாக்கரே கட்சி!

 

தனுஸ்ரீ தத்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ராஜ் தாக்கரே கட்சி!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீது புகார் கூறிய பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை: மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீது புகார் கூறிய பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

’காலா’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நானா பட்டேகர், 10 ஆண்டுகளுக்கு முன் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டினார். மேலும், நானா பட்டேகருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே குண்டாஸ்களை வைத்து மிரட்டுவதாகவும் தனுஸ்ரீ குற்றம்சாட்டினார்.

இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் தனுஸ்ரீ மீது போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து தனுஸ்ரீ மீது அவதூறு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

tanushree

இதனிடையே, நானா பட்டேகர் தனக்கு பாலியல் புகார் அளித்ததாக தேசிய மகளிர் ஆணையத்தில் தனுஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.