தனுஷ் ரசிகர்கள் சென்னை ரோகிணி தியேட்டரில் தர்ணா!
ரோகிணி திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரோகிணி திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகினி திரையரங்கில் அசுரன் இரவு காட்சிக்காக ரசிகர்கள் சென்றுள்ளனர். அப்போது திரைப்படம் 10 நிமிடத்திற்கு முன்னதாகவே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆடியோ பிரச்னை காரணமாக வசனங்கள் கேட்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் படத்தை முதலிலிருந்து ஒளிபரப்ப வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திரையரங்க நிர்வாகம், டிக்கெட் கட்டணத்தைத் திரும்ப அளிப்பதாகவும், ஆன்லைன்லில் முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று உறுதி கூறியதை அடுத்து ரசிகர்கள் கலைந்து சென்றனர். இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.