தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் இணைந்த மலையாள படக்குழு!

 

தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் கூட்டணியில் இணைந்த மலையாள படக்குழு!

கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ்  கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வந்தன. இது ஒரு  மிஸ்டரி திரில்லர் படம் என்பதால், இந்த மலையாள டீமை வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியதில் சுஹாஸ் மற்றும் ஷார்பு தன் படத்திற்கு கதை எழுதப்போவதை உறுதிப்படுத்தியிருந்தார்..

தனுஷின் அடுத்த படத்திற்கு கதை எழுதுவதற்கு மலையாள சினிமாவைச் சேர்ந்த சுஹாஸ் மற்றும் ஷராபு என்பவர்களை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பாஹத் பாசில் நடித்த வரதன் மற்றும் வைரஸ் படங்களுக்கு கதை  எழுதியுள்ளனர்.

suhas-and-sharafu

கார்த்திக் நரேன் மற்றும் தனுஷ்  கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்புகள் வந்தன. இது ஒரு  மிஸ்டரி திரில்லர் படம் என்பதால், இந்த மலையாள டீமை வரவழைத்துள்ளதாக கூறப்படுகிறது.  சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியதில் சுஹாஸ் மற்றும் ஷார்பு தன் படத்திற்கு கதை எழுதப்போவதை உறுதிப்படுத்தியிருந்தார்..

டி 43 என்று பெயரிடப்பட்ட இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்திற்கு  ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனந்த் எல். ராய் இயக்கும் இந்தி திரைப்படமான ‘அட்ரங்கி ரே’, ‘செல்வராகவனுடன் புதுப்பேட்டை 2 என வரிசையாக படங்களைக் கையில் வைத்துள்ளார்.