தனுஷ் என் நலம் விரும்பி…விவகாரத்து குறித்து மனம் திறந்த நடிகை அமலா பால்

 

தனுஷ் என் நலம் விரும்பி…விவகாரத்து குறித்து மனம் திறந்த நடிகை அமலா பால்

அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.  இதனால் தான் அவர்கள் காதல் திருமணம் விவாகரத்து வரை சென்றது’ என்று கூறினார். 

தமிழில் கீரிடம், தெய்வ திருமகன், தேவி 2  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர்  ஏ.எல். விஜய். இவர் இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பாலை  கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே  விவாகரத்து பெற்றனர்.

ttn

இதையடுத்து  அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார்.  சமீபத்தில் இவர் ஆடை படத்தில் நடித்துள்ளார்.இதையடுத்து படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்த இயக்குநர்  ஏ.எல் விஜய்   ஐஸ்வர்யா என்ற பெண்ணை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். 

 

சமீபத்தில் ஏ.எல் விஜய் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ. எல் அழகப்பன் என் மகன் விவாகரத்து நடக்க தனுஷ் தான் காரணம் என பேட்டி ஒன்றில் கூறினார் .அதில் , ‘விஜய்யும் அமலா பாலும் காதலிக்கும் போதே அமலா பால் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதில்லை என்று  முடிவு செய்திருந்தனர். சில மாதம் சொன்னதைச்  செய்தவர் விஜய் நடிக்க வேண்டாம் என கூறியும்  தனுஷின் தயாரிப்பில்  அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.  இதனால் தான் அவர்கள் காதல் திருமணம் விவாகரத்து வரை சென்றது’ என்று கூறினார். 

 

இந்நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தனுஷ் தான் உங்கள் விவகாரத்துக்குக் காரணமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசியுள்ள அவர், விவகாரத்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை. அது முழுக்க முழுக்க என் முடிவு. தனுஷ் என் நலம் விரும்பி. இதற்கு மேல் அது குறித்து பேச விரும்பவில்லை என்றார்.  மேலும் உங்கள் காதலரை எப்போது மணக்க போகிறீர்கள் என்ற கேள்விக்கு, காதலை வெளிப்படையாக அறிவித்தமாதிரி திருமணத்தையும் அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.