தனுஷை மயக்கிய பாடல்:எது தெரியுமா?

 

தனுஷை மயக்கிய பாடல்:எது தெரியுமா?

நடிகர் தனுஷ் மெஹந்தி சர்க்கஸ் பாடல்களை கேட்ட பிறகு  இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை பாராட்டியுள்ளார்.

சென்னை: நடிகர் தனுஷ் மெஹந்தி சர்க்கஸ் பாடல்களை கேட்ட பிறகு  இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை பாராட்டியுள்ளார்.

நடிகர் தனுஷ தனது வொண்டர்பார் நிறுவனத்தில் நிரந்தரமாக சில இயக்குநர்களை பணிக்கு அமர்த்தியிருக்கிறார். இந்த இயக்குநர்கள் தனுஷை வைத்து படமெடுத்து இப்போது வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள். அவர்களுக்குப் படம் இயக்க வாய்ப்பு வந்தால் தனியாக சென்று பணியாற்றி விட்டு மீண்டும் வந்து சேர்ந்து கொள்ளலாம். இப்படி ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. இதனால்தான் தனது படத்தின் ஆடியோவைக்கூட வெளியே விற்காமல் தானே வைத்துக் கொண்டு அதையும் யூ டியுப்பில் ட்ரெண்ட் செய்து விட ஒரு குழுவை உருவாகியுள்ளார்.

roldan

சமீபத்தில் அவரை மயக்கிய பாடல் ராஜீமுருகனின் கதையில் வெளிவர இருக்கும் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் பாடல்கள்தான். அந்தப் படத்தில் இடம் பெற்ற .’வெள்ளாட்டுக் கண்ணழகி’, ‘கோடி அருவி கொட்டுதே’ ஆகிய பாடல்களை கேட்ட தனுஷ் உங்கள் தெய்வீகக்குரலும், புனித இசையும் மனதை வருடுகிறது என்று படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனை போன் செய்து பாராட்டியிருக்கிறார்.   

mehanticircus

அனிருத்துக்கும் தனுஷுக்குமிடையே நிகழ்ந்து வரும் பனிபோர் இருப்பதால் இந்த வாழ்த்துக்குப் பின்னால் ஒரு அரசியலும் இருப்பதாக கூறப்படுகிறது.  இதானால் ஷான் ரோல்டனை பாராட்டி எதிர்தரப்பினருக்கு செக் வைத்திருக்கிறார் தனுஷ். தனுஷின் அடுத்த படத்தில் ஷான் ரோல்டன் இசை இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.