தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்! கொந்தளிக்கும் கருணாஸ் படை

 

தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும்! கொந்தளிக்கும் கருணாஸ் படை

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தை தடை செய்து அப்படத்தி இயக்குநர் மாரி செல்வராஜை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தை தடை செய்து அப்படத்தி இயக்குநர் மாரி செல்வராஜை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் இப்படம் வேறுபட்டே இருந்தது.   மாரி செல்வராஜின் அடுத்த படைப்பில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டிருந்தது. படத்தின் பெயரை மாற்றக்கோரி நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை   தலைவர் K.சந்திரசேகரன், தயாரிப்பாளர் தாணுவுக்கு கடிதம் எழுதினார்.

complaint copy

இந்நிலையில் தற்போது முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு செயலாளரும், நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன் காவல்நிலையத்தில் அளித்த புகார் மனுவில்,  “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.