தனியார் வணிக வளாகத்தில் நள்ளிரவில் பற்றிய தீ : ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் !

 

தனியார் வணிக வளாகத்தில் நள்ளிரவில் பற்றிய தீ : ரூ. 5 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் !

தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்ததால் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர்.

மதுரை நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம் பகுதியில் தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வளாகத்தில் நேற்று நள்ளிரவு சிறியதாக தீ ஒன்று பற்றியுள்ளது. அதனை யாரும் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த தீ, சற்று நேரத்தில்  மளமளவெனப் பரவி கொளுந்து விட்டு எரிந்து அந்த கட்டிடம் முழுவதுமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 

ttn

உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்ததால் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுவதுமாக அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தினுள் இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 

இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.