” தனியார் பள்ளியின் ரிசல்ட்டு மோகம் “-100% பாஸ்க்காக பாய்சன் கொடுக்கப்பட்ட பள்ளி மாணவி ..

 

” தனியார் பள்ளியின் ரிசல்ட்டு மோகம் “-100% பாஸ்க்காக பாய்சன் கொடுக்கப்பட்ட பள்ளி மாணவி ..

மகாராஷ்டிரா மாநிலம் ,ஷிரோல் தாலுகாவின் ஷிர்தி கிராமத்தில் ஒரு தனியார் பள்ளியில் நிலேஷ் என்ற ஆசிரியர் பிப்ரவரி 20 ன் தேதி சனிகா என்ற 10ம் வகுப்பு மாணவி  பிராக்டிகல் எக்ஸாமுக்கு வந்தபோது ஒரு கெமிக்கல் கலந்த நீரை கொடுத்து குடிக்க சொன்னார்.

ஒரு தனியார் பள்ளி ஆசிரியர்  100%ரிசல்ட்டுக்காக,சுமாராக படிக்கும் ஒரு மாணவி எக்ஸாம் எழுதாமல்  இருக்க அவருக்கு விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது 

மகாராஷ்டிரா மாநிலம் ,ஷிரோல் தாலுகாவின் ஷிர்தி கிராமத்தில் ஒரு தனியார் பள்ளியில் நிலேஷ் என்ற ஆசிரியர் பிப்ரவரி 20 ன் தேதி சனிகா என்ற 10ம் வகுப்பு மாணவி  பிராக்டிகல் எக்ஸாமுக்கு வந்தபோது ஒரு கெமிக்கல் கலந்த நீரை கொடுத்து குடிக்க சொன்னார்.அந்த மாணவியும்  ஆசிரியர் கொடுத்ததால் வாங்கி குடித்துவிட்டு எக்ஸாமுக்கு வந்தார்.ஆனால் வந்த சிறிது நேரத்திலேயே அவருக்கு மயக்கம் வந்துள்ளது,அதனால் எக்ஸாம் எழுதாமல் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்  அந்த மாணவி பிப்ரவரி 25 ம் தேதி இறந்தார்.

teacher crime

அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரை விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஆம்  அந்த ஆசிரியர்  அந்த மாணவி சுமாராக படிப்பதால் அவர் எக்ஸாம் எழுதினால்,அதில் அவர் தோல்வியடைந்தால்  100%ரிசல்ட் கிடைக்காதென்பதால் ,நிலேஷ் என்ற ஒரு ஆசிரியர்  ஒரு விஷம் கலந்த நீரை கொடுத்து அந்த மாணவியை கொன்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிறகு இது பற்றி அந்த ஆசிரியரிடம் போலீஸ் விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் ,இப்போது போலீஸ் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து,கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.