தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா!

 

தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை செய்து வரும் பெண் ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் பெண் தொகுப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. இதனால் அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுங்கம்பாக்கம்  பெண்கள் விடுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.  பெண்கள் விடுதி அமைந்துள்ள தெரு தடை செய்யப்பட்டுள்ளது.

tv

முன்னதாக சென்னையில்  உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணி புரிந்து வந்த பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.