தனிமையில் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர்; தேனியில் பரபரப்பு!
மாணவி ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி : மாணவி ஒருவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே சிலமலை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்வதால் மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தாலும், தனியாக இருக்கும் படியான சூழல் இருந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டி என்பவர் ஆசை வார்த்தை கூறி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மாணவியின் பெற்றோரும் வீட்டில் இல்லாததால் இது குறித்து தெரியாமல் இருந்துள்ளனர். இதையடுத்து ஒருநாள் மாணவி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராமல் தாமதமாக வந்துள்ளார். இதை கண்ட வீட்டிலிருந்த அவரின் தாயார் இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய் என கேட்கும்போது, மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க, போடி தாலுகா காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் தங்கப்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து மாணவியின் நலன் கருதி மாணவியை போலீசார், காப்பகத்தில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 நாட்களுக்கு பிறகு ஒருவர் கைது; உண்மை நிலவரம் என்ன?