தனிமைப்படுத்திக்கொண்ட அமிதாப்பச்சன்…. வீட்டிலே இருங்கள் என்று மக்களுக்கு அட்வைஸ் செய்த கனிமொழி!

 

தனிமைப்படுத்திக்கொண்ட அமிதாப்பச்சன்…. வீட்டிலே இருங்கள் என்று மக்களுக்கு அட்வைஸ் செய்த கனிமொழி!

கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எல்லாம் தப்பித்து வெளியிடங்களில் அலட்சியமாக சுற்றித் திரிவதாக செய்திகள் வரும் நிலையில், நம்மை நாமே காத்துக்கொள்ள நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதே சரியானது என்கின்றனர்

கொரோனா பாதிப்பு காரணமாக பொது மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும்படியும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒத்திவைக்கும்படியும் தி.மு.க எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

amitabh-bachchan

கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எல்லாம் தப்பித்து வெளியிடங்களில் அலட்சியமாக சுற்றித் திரிவதாக செய்திகள் வரும் நிலையில், நம்மை நாமே காத்துக்கொள்ள நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதே சரியானது என்கின்றனர் மருத்துவர்கள். நடிகர் அமிதாப்பச்சன் கூட கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று அழியாத மையால் முத்திரைக் குத்தப்பட்டவர்கள் கொஞ்ச நாளைக்கு தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொது மக்களுக்கு அறிவுரையை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா அச்சுறுத்தல் நீடித்துவரும் வேளையில் பயணம், சந்திப்பு மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதை கூடுமானவரை தவிர்த்து வீட்டிலேயே தங்குமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன். ஒரு நபரை சந்திக்கும்போது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு உரையாடுங்கள். 
போராட்டங்கள், திருமண நிகழ்வுகள் போன்ற ஒன்றுகூடல்களை சற்று ஒத்திவைக்கலாம். ஒரு சமூகமாக நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாகவும், அக்கறையோடும் இருப்போம்” என்று கூறியுள்ளார்.