தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்தி உண்மையல்ல… தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன்… கமல் விளக்கம்!

 

தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்தி உண்மையல்ல… தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன்… கமல் விளக்கம்!

இன்று காலை நடிகர் கமலின் தேனாம்பேட்டை எல்டம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி ஒட்டியது. ஊடகங்களில் அது தொடர்பான செய்தி வெளியாகவே, அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. தவறுதலாக ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தேனாம்பேட்டை இல்லத்தில் தான் வசிக்கவில்லை, இரண்டு வாரங்களாகத் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளேன் என்று நடிகர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை நடிகர் கமலின் தேனாம்பேட்டை எல்டம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி ஒட்டியது. ஊடகங்களில் அது தொடர்பான செய்தி வெளியாகவே, அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. தவறுதலாக ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. 

kamal-house-25

ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் செய்தியாளர்கள் செய்தி வெளியிடும் முன்னர் அதை உறுதி செய்து வெளியிட வேண்டிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

kamal-house

சென்னை மாநகராட்சி கமிஷனரின் அறிவிப்புக்குப் பிறகு ஒரு தெளிவு கிடைத்தது. தற்போது கமல் அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றவர்களிடம் இருந்து தனக்கு கொரோனா பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளாரா, அல்லது வெளிநாட்டுக்கு சென்று வந்தது அல்லது சென்று வந்தவர்களுடன் பழகியதால் தனக்கு கொரோனா வரலாம் என்ற அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.