தனிமைபடுத்தப்பட்டுள்ள 193 பேர்.. கொரோனா பாதித்த நபருடன் ரயிலில் பயணித்ததால் நடவடிக்கை!

 

தனிமைபடுத்தப்பட்டுள்ள 193 பேர்.. கொரோனா பாதித்த நபருடன் ரயிலில் பயணித்ததால் நடவடிக்கை!

நாடு முழுவதும் கடுமையாக பரவிவரும் கொரோனாவால் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 258 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடுமையாக பரவிவரும் கொரோனாவால் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 258 பேர் பாதிக்கபட்டுள்ளனர். அதில் 23 பேர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யபட்டதையடுத்து, அவர்கள் அனைவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tt

அந்த 3 நபர்களுள் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அயர்லாந்தில் இருந்து டெல்லிக்கு வந்து, அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் வந்தார். அவருக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வந்த போது அவருடன் ரயிலில் சென்னை வந்த நபர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவருடன் ரயிலில் பயணித்த 193 பேரும் தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். இதனை பற்றி, நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, அந்த 193 பேரும் தனிமைபடுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.