தனது குட்டிகளுடன் கம்பீர நடை போடும் பெண் புலி.. வைரல் போட்டோஸ்!
புலி தனது குட்டிகளை பத்திரமாக காக்கும் குணம் கொண்டது அதே சமயம் அவைகளை தைரியத்துடன் வளர்ப்பதிலும் தன் கடமையை சிறப்புடன் ஆற்றும் வல்லமை கொண்டது.
புலி தனது குட்டிகளை பத்திரமாக காக்கும் குணம் கொண்டது அதே சமயம் அவைகளை தைரியத்துடன் வளர்ப்பதிலும் தன் கடமையை சிறப்புடன் ஆற்றும் வல்லமை கொண்டது.
ட்விட்டரில் ஒரு புலி தனது ஐந்து குட்டிகளுடன் காட்டில் கம்பீரமாய் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. அடர்ந்த காடுகளின் நடுவே அவைகள் நடந்து செல்லும் காட்சி, புலியின் மீதான பயத்தையும் தாண்டி அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது.
அந்தப் புகைப்படத்தை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான்,தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். இதனுடன் கேப்ஷனாக ‘இது ஒரு மேஜிக்கல் புகைப்படம். குட்டிகளை எண்ணுங்கள் #கப்ஸ் #டைக்ரஸ்’ என்று குறிப்பிட்டு, இதைப் பார்ப்பவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நான் அறிவேன்… அழிவின் விளிம்பிலிருக்கும் இந்த இனத்தைக் காப்பதற்கு கூடுதலாக மெனக்கிட்ட வேண்டும்… என்று குறிப்பிட்டவர், கடைசியாக புகைப்படம் கர்ட்டஸி ; ‘சித்தார்த் சிங்’ என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
This is magical picture. Count the #cubs with #tigress. I know for a reason how few people will be elated after seeing this. Efforts are helping in making this species bounce back from verge of extinction. PC Siddharth Singh. Magical Terai. pic.twitter.com/ZIaMlUAxBj
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 6, 2020
மேலும், போஸ்ட் செய்த சில நிமிடங்களிலேயே இந்த போட்டோ ஏகப்பட்ட லைக்ஸ்,ஷேர்ஸ் என்று தெறிக்கவிட்டிருக்கிறார்கள். ‘நம்பமுடியவில்லை, பியூட்டிபுல்,கலப்படமற்றது,நன்றிகள் என கமெண்ட் பண்ணியிருக்கிறார்கள். இன்னொருத்தர் தனது கமெண்ட்டில் ‘இந்த புகைப்படத்தை ஷேர் செய்ததற்கு மிகவும் நன்றி.நாம் பார்த்துக்கொண்டிருக்கிற வேலைகளைவிட வேலையை விட புலிகளைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சியில் பங்கெடுப்பதும்,உழைப்பதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கார்.