தனது அடுத்த படத்தில் வக்கீலாகக் களமிறங்கும் சூர்யா!?

 

தனது அடுத்த படத்தில் வக்கீலாகக் களமிறங்கும் சூர்யா!?

சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் சூர்யா இந்த படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார். தற்போது சூர்யா கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் சூர்யா இந்த படத்தின் மீது அபார நம்பிக்கை வைத்துள்ளார். தற்போது சூர்யா கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

soorari-pottru-02.jpg

இந்த படத்தில் வழக்கறிஞராக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இருளா பழங்குடி இன மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட இந்த படத்தில் அந்த மக்களின் உரிமை மற்றும் நலனுக்காக போராடும் ஒரு வக்கீலாக நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

soorari-pottru-08

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், ஹரி இயக்கத்தில் அருவா என அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் படங்களைக்  கையில் வைத்துள்ளார் சூர்யா. சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு பழைய பார்முக்கு திரும்புவார் என நம்புவோம்!