‘தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி’ – சோனியா காந்தி புகழாரம்

 

‘தந்தை பெரியார், அண்ணா வழியில் சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி’ – சோனியா காந்தி புகழாரம்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். 

sonia gandhi

அந்த விழாவில் பேசிய சோனியா காந்தி, “நவீன இந்தியாவின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை கொள்கிறேன். தமிழகத்தின் முதல்வராக 5 முறை இருந்து தமிழகத்தை நிர்வகித்தவர் கருணாநிதி. 

தமிழக சட்டமன்றத்திற்கு 13 முறை போட்டியிட்டு தோல்வியே காணாதவர். தமிழை செம்மொழியாக அறிவித்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி. தமிழ் மீது தீராப்பற்று கொண்ட காரணமாக நாவல்கள், சிறுகதைகள், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் கலைஞர். தன்னுடைய உடன்பிறப்புகளே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.

sonia

மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அறிவித்தது கலைஞர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் கருணாநிதி. மதச்சார்பற்ற அரசியல்வாதியான கருணாநிதியை காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் மறக்க மாட்டோம்.

தற்போதைய அரசியல் போராட்டத்தில் காங்கிரஸ் – திமுக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என பேசியுள்ளார்.