தந்தை நினைவாக இருந்த பைக் திருடு: மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!

 

தந்தை நினைவாக இருந்த பைக் திருடு: மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை!

R15 பைக்கை  லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுத்துள்ளார்.  இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு தியாகராஜன் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். 

சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெரு பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். 21 வயதான இவர் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார்.  நடுத்தர குடும்பமாக இருந்தாலும் தியாகராஜன் விரும்பியதை செய்து கொடுத்த அவரது தந்தை உயர் ரக R15 பைக்கை  லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து வாங்கி கொடுத்துள்ளார்.  இதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு தியாகராஜன் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். 

tt

தியாகராஜன்  தந்தை நினைவாக அந்த பைக்கை பாதுகாத்து வந்த நிலையில் கடந்த மாதம்  5 ஆம் தேதி வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக் திருடு போனது. இதுகுறித்து வேப்பரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக பைக் கண்டுபிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

rr

இதனால் மன உளைச்சலில் இருந்த தியாகராஜன் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பரி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி ராஜிவ்காந்தி மருத்துவனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஏற்கனவே பைக் தொலைந்து போன சில நாட்களிலேயே தியாகராஜன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.