தந்தை கண்முன்னே உயிரிழந்த பள்ளி மாணவி: உண்மை நிலவரம்?

 

தந்தை கண்முன்னே உயிரிழந்த பள்ளி மாணவி: உண்மை நிலவரம்?

பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது தந்தை கண்முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது தந்தை கண்முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அனகாபுத்தூர் குருசாமி நகரை சேர்ந்தவர் ஆலியா. இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக தன் தந்தையுடன் பள்ளிக்கு செல்வது வழக்கம்.  இந்நிலையில், தந்தை அம்ஜித் உடன் இன்று பள்ளிக்கு சென்றுகொண்டிருக்கும் போது  பொழிச்சலூரில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசின் மினி பஸ்  முந்த நினைக்கும்போது போது, வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்த அம்ஜித் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக பஸ்சின் முன்பகுதியில் சிக்கிய அலியா மீது பேருந்தின் சக்கரங்களில் சிக்கி  சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சம்பவ இடத்தை விட்டு தப்பி ஓடிச் சென்றார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சங்கர் நகர் காவல் நிலைய அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநரை  தேடி வருவது குறிப்பிடத்தக்கது.