“தந்தையை குச்சியால் அடித்த பால் வியாபாரி”.. பழி வாங்க வெட்டிக் கொலை செய்த மகன்: அதிர்ச்சி சம்பவம்!

 

“தந்தையை குச்சியால் அடித்த பால் வியாபாரி”.. பழி வாங்க வெட்டிக் கொலை செய்த மகன்: அதிர்ச்சி சம்பவம்!

அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மாடுவிழுந்தான் பாறை என்னும் கிராமத்தில் வசித்து வந்தவர் அன்பழகன்(28). இவர் கடந்த செவ்வாய் கிழமை காலை, பால் விநியோகம் செய்ய போகும் போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அன்பழகனின் உடலை பிரேத பாரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, அன்பழகனை தாங்கள் தான் கொலை செய்ததாக கதிரேசன் உள்ளிட்ட 4 இளைஞர்கள் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ttn

சில நாட்களுக்கு முன்னர் கதிரேசன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், மது போதையில் இருந்ததால் தங்களுக்குள் ஆபாச வார்த்தைகளில் திட்டிக் கொண்டதாகவும் கூறினர். அப்போது எதிரே வந்த அன்பழகன் அவர்கள் தன்னை தான் திட்டுவதாக தவறாக எண்ணிக் தங்களிடம் தகறாரு செய்ததாகவும் கூறியுள்ளனர். 

அதுமட்டுமில்லாமல், அன்று இரவு அன்பழகன் தனது நண்பர்களுடன் கதிரேசன் வீட்டுக்கு சென்று மிரட்டியதாகவும், அச்சமயம் கதிரேசனின் தந்தை அவர்களிடம் மன்னிப்பு கேட்டதை பொருட்படுத்தாமல் அவரை குச்சியால் அன்பழகன் தாக்கியவதாகவும், அதற்கு பழி வாங்கத் தான் அன்பழகனை கொலை செய்ததாகவும் அந்த இளைஞர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.  அவர்களின் இந்த வாக்குமூலம் போலீசாரை அதிரச் செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.