தந்தையின் பிறப்புறுப்பை அறுத்த கொடூரமாக கொலை செய்த மகன்

 

தந்தையின் பிறப்புறுப்பை அறுத்த கொடூரமாக கொலை செய்த மகன்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை அடுத்த ஹுட்கேஷ்வர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரான  உடற்பயிற் பயிற்சியாளர் விக்ராந்த் கைது செய்யப்பட்டார். இவர் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

நாக்பூரில் குடும்பத் தகராறு காரணமாக ஜிம் பயிற்சியாளர் ஒருவர் தனது தந்தையின் பிறப்புறுப்பை அறுத்து,கொடூரமாக தாக்கி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 
இந்த சம்பவத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை அடுத்த ஹுட்கேஷ்வர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரான  உடற்பயிற் பயிற்சியாளர் விக்ராந்த் கைது செய்யப்பட்டார். இவர் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், விக்ராந்த் தனது தந்தையை வராண்டாவிற்கு இழுத்து சென்றார். தந்தையின் கழுத்தை முதலில் கடித்து குதறினார். ஒரு சைக்கோ போல அவரது பிறப்புறுப்புகளை வெட்டினார். இதனால் 55 வயதான தந்தையின் கழுத்தில் இருந்து ரத்தம் அதிகம் வெளியேறியது.  இதனால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். தந்தையை காப்பாற்ற தாயும், சகோதரியும் வந்தபோது அவர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் குற்றவாளியை கட்டி இழுத்து வர 5 போலீஸ்காரர்கள் தேவைப்பட்டனர். குற்றவாளி மீது வழக்குப்பதிந்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 
ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடப்பதால் அதுவே ஒரு மனோவியாதி போல் ஆகிவிட்டது. இதனால் குடிப்பழக்கம், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், குடும்ப வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.