தத்து எடுத்த குழந்தையை அடித்து கொன்ற கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

 

தத்து எடுத்த குழந்தையை அடித்து கொன்ற கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

குழந்தை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் : குழந்தை அடித்து கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்தவர் வெஸ்லி மாத்யூஸ். இவர் மனைவி சினியுடன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சட்சன் நகரில் வசித்து  வந்தார். இந்த தம்பதி கடந்த 2016 ஆம் ஆண்டு  பீகாரில் உள்ள அனாதை இல்லம் ஒன்றிலிருந்து ஷெரின் என்ற மூன்று வயது பெண்ணை தத்து எடுத்துள்ளனர். 

sherin

இதையடுத்து  2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷெரின் இரவில் பால் குடிக்காததால் கோபமான வீட்டுக்கு வெளியே நிறுத்தி, குழந்தைக்குத் தண்டனை கொடுத்ததாகவும், சிறிது நேரம் கழித்து சிறுமியை தேடிய போது அவள் மாயமாகி இருந்ததாகவும் போலீசில் மாத்யூஸ் புகார் கொடுத்தார்.  புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து இறங்கிய விசாரணையில்,  2 வாரங்கள் கழித்து மேத்யூஸ் வீட்டு  பக்கத்திலிருந்த சுரங்க பாதையில் சிறுமியின் சடலத்தை போலீசார் மீட்டனர். இதுதொடர்பான வழக்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

sherin

இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தையை மாத்யூஸ் அடித்துக் கொன்றது தெரியவந்தது. மேலும் நீதிமன்றத்தில் அவர் அதை ஒப்புக்கொண்டார்.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றத்தை ஒப்புக்கொண்ட வெஸ்லி மாத்யூஸுக்கு ஆயுள் தண்டனை அளித்து டெக்சாஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.