தண்ணீர்…தண்ணீர்…துணிச்சலாக இழுத்து மூடிய தாம்பரம் பள்ளி நிர்வாகம்…சென்னை பள்ளிகளையும் இழுத்து மூடும் அபாயம்…

 

தண்ணீர்…தண்ணீர்…துணிச்சலாக இழுத்து மூடிய தாம்பரம் பள்ளி நிர்வாகம்…சென்னை பள்ளிகளையும் இழுத்து மூடும் அபாயம்…

‘சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை.

‘சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வதந்தி கிளப்பியுள்ளனர். இதில் உண்மையில்லை. தமிழகத்தில் குடிநீர் விநியோகம் சீராக  வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தற்போது நிலவும் சூழ்நிலையில் வீண்  வதந்திகளை நம்பி செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டாம்.’என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மிஸ்டர் ‘அரிச்சந்திரன்’ வேலுமணி கூறிவரும் நிலையில் தாம்பரம் அரசு பள்ளி ஒன்றுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் இரண்டாவது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

water

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மேன்சன்கள், ஹோட்டல்கள் மூடப்படும்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க பெண்களும், ஆண்களும் படாதபாடு பட்டு வருகின்றனர். குடம் தண்ணீர் 10க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் தினசரி ₹300 சம்பாதித்தால் அதில் ₹200 தண்ணீருக்கே செலவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தாம்பரத்தில் பள்ளி ஒன்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

water

கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் கிட்டத்தட்ட மூன்றுஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு நேற்றும் இன்றும்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் அனுமதி பெற்றே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

water

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறும்போது, தண்ணீர் பிரச்னை இங்கும் அதிகம் காணப்படுகிறது. எனவே அதிக விலை கொடுத்துதான் வாங்கி வருகிறோம்.அத்துடன் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் வசதியும் இல்லை. அதனால் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைந்து விடும். அதன்பின் வழக்கம்போல பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் உண்மை நிலவரத்தைப் பார்த்தால் தாம்பரம் பள்ளியைத் தொடர்ந்து சென்னையின் பெரும்பாலான பள்ளிகள் இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும் என்றே தெரிகிறது.