தண்ணிய குடிங்க தண்ணிய குடிங்க: செய்தியாளர்கள் சந்திப்பில் ஜகா வாங்கிய அன்புமணி

 

தண்ணிய குடிங்க தண்ணிய குடிங்க: செய்தியாளர்கள் சந்திப்பில் ஜகா வாங்கிய அன்புமணி

தியாகராய நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தினறினார்.

சென்னை: தியாகராய நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தினறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக – பாமக கூட்டணி அமைத்தது பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தியாகராய நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸிடம் இந்தக் கூட்டணி குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. 

திராவிட கட்சிகளோடு கூட்டணி அமைக்க மாட்டோம் என தெரிவித்தது, அதிமுகவின் குட்கா ஊழல், அதிமுக ஊழலற்ற கட்சியா என செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை அடுக்கினார்கள். இதில் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அன்புமணி, நாங்கள்தான் மக்களை சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் நீங்கள் ஏன் பதட்டமா இருக்கிறீர்கள், தண்ணிய குடிங்க என்றார். மேலும் அவர், தொடர்ந்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் காட்டமாக பேசினார்.