தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை !

 

தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலம்.. கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை !

திருப்பூர் ரயில் தண்டவாளம் அருகே ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

திருப்பூர் ரயில் தண்டவாளம் அருகே ஒரு இளைஞரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர். 

ttn

அந்த விசாரணையில்,  இறந்தவர் திருப்பூர் அணைப்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் பெரியசாமி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த அவர், நேற்று காலை வேலைக்குச் சென்று வீடு திரும்பாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

ttn

பெரியசாமி அவரே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து ரயில் நிலையம் அருகே சடலத்தைப் போட்டுவிட்டுச் சென்று விட்டார்களா என்று காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால், என்ன நிகழ்ந்தது என்று தெரிய வரும் என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.